போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள் வைத்திருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக் என தெரியவந்தது. தொடர்ந்து தலைமைறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.இந்த வழக்கில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி அமீர் டெல்லி சென்றார். அங்கு அவரிடம் அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்,